கங்கனா ரணாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம் – இது தான் காரணமா !!!

1

கங்கனா ரணாவத் ட்விட்டர் கணக்கு முடக்கம் – இது தான் காரணமா!!!

கங்கனா ரணாவத் ட்விட்டர் கணக்கு விதிமுறைகளை மீறியதாக கூறி தற்போது முடக்கப்பட்டுள்ளது. வங்காளத்தில் தேர்தலுக்கு பிந்தைய முடிவுகள் குறித்து வன்முறை தூண்டும் வகையான சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை நடிகை கங்கனா ரணாவுத் தனது ட்விட்டரில் பதிவிட்டார். எனவே அவரது ட்விட்டர் கணக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 

கங்கனா ரணாவத் ட்வீட்டில்,”பாஜக வெற்றி பெற்ற அசாம், புதுச்சேரி மாநிலங்களில் வன்முறை நிகழவில்லை. ஆனால், மேற்கு வங்கத்தில் வன்முறை நிகழ்கிறது. மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை ஒடுக்கவேண்டும்” என பதிவிட்டிருந்தார்.

எனவே இதை தொடர்ந்து “hateful conduct and abusive behavior”” குறித்த ட்விட்டர் விதிமுறையை கங்கனா ரணாவத் மீண்டும் மீண்டும் மீறியதாக சமூக வலைத்தளத்தில் பலரும் ட்விட்டர் கணக்கை முடக்க கோரி வலியுறுத்தினர். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு தற்போது முடுக்கப்பட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here