நடப்பு ஆண்டிற்கான “G20 உச்சி மாநாடு” டெல்லியில் நாளை (செப்டம்பர் 9) மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 10) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும், டெல்லிக்கு வருகை தர உள்ளனர். பங்கேற்கும் தலைவர்களுக்கு அசைவ உணவு இல்லாமல் சைவ விருந்தில் திணை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் மொரிஷியஸ் ஆகிய 5 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளனர். இதில் பாதுகாப்பு, நிதி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆலோசிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாயமாகும் ரேஷன் பொருட்கள்…, கடுமையான விதிகளை அறிவித்த நுகர்வோர் துறை!!