தமிழகத்தில் சாலை விபத்துக்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இறுதி ஊர்வலத்தின் போது வீசப்பட்ட மாலையில் பைக்கை ஏற்றிய ஒருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி-க்களுக்கு டி.ஜி.பி. புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதில் இறுதி ஊர்வலத்தின் போது பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும். இறந்தவரின் உறவினர்கள் எப்போது? எந்த வழியே ஊர்வலம் செல்ல இருக்கிறோம் என்பதை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். அதற்கேற்ப போக்குவரத்துகளை சரி செய்வதோடு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்த வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்.., இனி கவலை வேண்டாம்.., வெளியான சூப்பர் டூப்பர் நியூஸ்!!!