பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வந்தால் டீ, ஸ்நாக்ஸ் இலவசமாக தரும் ‘பிளாஸ்டிக் கஃபே’..!

0

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த ‘ஸ்வச் பாரத் அபியான்’ (தூய்மை இந்தியா) திட்டத்தின் கீழ் ‘பிளாஸ்டிக் கஃபே’ என்ற டீக்கடை திறக்கப்பட்டு உள்ளது.

குஜராத்தில் முதல் முறையாக..!

பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வந்தால் இலவசமாக டீ மற்றும் ஸ்னாக்ஸ் கொடுக்கும் ‘பிளாஸ்டிக் கஃபே’ இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தில் உள்ள தகோத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்த கடைக்கு 1 கிலோ பிளாஸ்டிக் குப்பையை கொண்டு வருவபற்கு ஸ்னாக்ஸ் மற்றும் அரைகிலோ பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு வருபவருக்கு டீ யும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் பிளாஸ்டிக் குப்பைகள் தெருக்களில் கொட்டிக்கிடப்பது குறையும் என கூறியுள்ளனர்.

மேலும் இந்த கடையில் தயாரிக்கப்படும் டீ மற்றும் ஸ்னாக்ஸ் மாநில அரசின் சக்தி மண்டல் திட்டத்தின் கீழ் பெண்களால் தயாரிக்கப்படுகிறது என்பது மேலும் சிறப்பான ஒன்றாகும். பெறப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தும் மறுசுழற்சிக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here