டெல்லி சட்டமன்ற தேர்தல்கள் ஓட்டுப்பதிவு சனிக்கிழமை நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 62.59 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. மேலும் டெல்லியில் 1.47 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஓட்டுகள் இன்று 21 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.
தேர்தலுக்கு பிந்தைய கணிப்பின் படி இந்த முறையும் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியைக் கைப்பற்றும் என கூறப்பட்டு இருந்தது.
45 இடங்களில் முன்னிலை..!
டெல்லி சட்டமன்ற தேர்தலின் தற்போதைய எண்ணிக்கை முடிவுகளின் படி ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து 45 இடங்களில் முன்னிலையில் உள்ளது. எனவே இந்த முறையும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி தான் அமையும் என்று கூறப்படுகிறது.
பாஜக.,வினைப் பொறுத்தவரை 23 இடங்களில் தற்போது முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளால் ஒரு இடத்தில கூட முன்னிலையில் வர முடியவில்லை.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |