கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து,வெளிமாநிங்களுக்கு வேலைக்கு சென்று இருக்கும் சுமார் 28 முதல் 29 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்திற்கே திரும்பி வருகின்றனர்,பீகார் மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு ஏராளமான தொழிலாளர்கள் சென்று வேலை பார்த்து வந்தனர் அவர்கள் மீண்டும் பீகாருக்குத் திரும்பியுள்ளனர்.அவர்களுக்கு பீகார் மாநில சுகாதாரத்துறை அரசு இலவச ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை மோசமானது
இந்தியா மட்டுமில்லாமல் உலகமே கொரோனாவால் பல்வேறு தொழில்களும் தொழிசாலைகளும் முடங்கியதால் வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை மோசமானது. தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்ததால் சொந்த ஊருக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தனர். சிறப்பு பேருந்துகள், ரயில்கள் மூலம் செல்வோர் ஒருபுறம் எனில், நடந்தே செல்லும் தொழிலாளர்கள் மறுபுறம்.என சொந்த ஊருக்கே திரும்பினார்.பீகார் மாநிலத்தில் வெளிமாநிலங்களில் பணியாற்றி வந்த லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு திரும்பிகின்றனர்.
புலம்பெயர் தொழிலாளிகளுக்கு இலவச ஆணுறை
சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளிகள் தனிமைப்படுத்துதல் மருத்துவ முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி சரியான மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதித்து தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் தனிமைப்படுத்ம் காலம் முடிந்த பின்னரே அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.8.77 லட்சம் தொழிலாளர்கள் இதுவரை பீகாரின் முகாம்களில் இருந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இன்னும் 5.33 லட்சம் தொழிலாளர்கள் முகாம்களில் தங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில் வீடுகளுக்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு இனி வேலையில்லை.வேலைக்கு போக சில மாதங்கள் ஆகும் என்பதால் கர்ப்பங்கள் அதிகரிக்கக்கூடும் எனவும் இது மத்திய, மாநில அரசுகளுக்கு நெருக்கடியான சூழலை ஏற்படுத்தும். இதை தவிர்க்கும் வண்ணம் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை பீகார் மாநில அரசு தொடங்கி வைத்துள்ளது.அதாவது ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா இரண்டு பாக்கெட் ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் வீடு திரும்பும் தொழிலாளர்களின் உடல்நிலையை அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து கவனிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு சென்று வழங்கும் இலவச ஆணுறை
2016-ம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதாரத்துறை சர்வேயில், இந்திய அளவில் அதிக அளவில் கருத்தலில் பீகார் முதலிடத்தில் உள்ளது. பீகாரில் ஒரு பெண்ணுக்கு 3.4 என்ற அளவில் கருத்தல் அளவு உள்ளது. ஆணுறைகள் வழங்குவது குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ‘ஹோலி, தீபாவளி பண்டிகைகளுக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பும் மாதங்களான மார்ச், நவம்பர் மாதங்களில் கருத்தல் அளவு அதிகமாக உள்ளதை ஏற்கெனவே கவனித்துள்ளோம். எனவே, தேவையற்ற கருத்தரித்தலை தவிர்க்கும் பொருட்டு ஆணுறைகள் வழங்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளனர்.சுகாதாரப் பணியாளர்கள் மூலமும் தொழிலாளர்களின் வீடுகளுக்கு சென்று இலவச ஆணுறைகளை விநியோக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |