முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் அனுமதி!!

0

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர்:

தமிழகத்தில் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலை வீசிய பொழுது அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிக சிறப்பாக செயல்பட்டார். மேலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்கும்படி தொடர்ந்து அறிவுறுத்தி வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் வீரியம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டை விட தற்போது தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் தற்போது தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும் தன்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது இந்த தகவலினால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here