இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சம் – ஒரே நாளில் 4,14,188 பேர் பாதிப்பு!!

0
corona
corona

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தினசரி பாதிப்பு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 4,14,188 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிஅக்ரிது வருகிறது.

கொரோனா பாதிப்பு:

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களாக 3 லட்சத்தை தாண்டி வந்த கொரோனா பாதிப்பு தற்போது 4 லட்சத்தை தாண்டி வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் நாட்டில் கொரோனாவால் 4,14,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,14,91,298 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் தொற்றின் காரணமாக 3,915 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் தொற்றுக்கு உள்ளாகி பலியானவர்களின் எண்ணிக்கை 2,34,083 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 3,31,507 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,76,12,351 ஆக அதிகரித்துள்ளது.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்!முதல்வராக பதவி ஏற்றார் ஸ்டாலின்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது நாட்டில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 36,45,164 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நாட்டில் கொரோனவால் பாதிப்பட்டவர்களின் விகிதம் 81.95% ஆகவும், உயிரிழப்பவர்களின் விகிதம் 1.09% ஆகவும் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் விகிதம் 16.96% ஆகவும் உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here