கொரோனாவில் இருந்து குணமடைந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் – இன்று டிஸ்சார்ஜ்!!

0

கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். அவர் இன்று வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா:

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை துன்புறுத்து வருகிறது. இந்த கொரோனா வைரஸ் பணக்காரர், ஏழை சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு பாக்காமல் அனைவரையும் தாக்கியது. குறிப்பாக அரசியல் பிரமுகர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் தமிழகத்தில் பல அமைச்சர்கள் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வரிசையில் கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி அன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தார் காமராஜ்.

சைடு போஸில் கும்முனு காட்சியளிக்கும் அனிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

ஒரு மாத காலமாக மருத்துவர்களின் தீவிர சிகிச்சையினால் தற்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சையின் பலனால் இவரது உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்றும் இவர் இன்று வீடு திரும்ப உள்ளார் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here