தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரண உதவித்தொகை தமிழக அரசு வழங்க உள்ளது. இதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடையில் பொதுமக்கள் இந்த டோக்கனை வைத்து பணம் வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுமக்கள் டோக்கனில் எந்த தேதி, எந்த நேரத்திற்கு வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி தான் ரேஷன் கடைக்கு பணம் வாங்க வரம் வேண்டும். மேலும் அந்த டோக்கன்களில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். இது தவிர பொதுமக்களுக்கு பணம் வாங்கும் போது ஏதேனும் குழப்பம் இருந்தால் அதை தீர்த்துக் கொள்ள அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே உங்களது குறைகளை அவர்களிடம் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் டோக்கன்களை உங்களிடம் இருந்து பெற்று அதை சரி பார்த்த பின்னர் தான் பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.