ராமேஸ்வர பாம்பனில் 200 மீட்டர் உள்வாங்கிய கடல்.., மீனவர்கள் மத்தியில் பதற்றம்!!

0

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்களின் புனித தலமாக அமைந்துள்ளது ராமேஸ்வரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி. இங்குள்ள கோயில்களை வழிபடுவதற்காகவும், தங்கள் சடங்குகளை செய்வதற்காகவும் நாடு முழுவதும் உள்ள கோடான கோடி பக்தர்கள் இங்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்து வருகின்றனர்.

மேலும் இந்த கோடை காலத்தில் இந்த பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்துக்கு முன்பு அமைந்துள்ள பாம்பன் கடல் திடீரென 200 கிலோ மீட்டர் உள்வாங்கியுள்ளது. மேலும் வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்றழுத்ததால் கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ரிசல்ட்  தேதி  வெளியீடு.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

இதுபோக நேற்று சூறாவளி காற்று அடித்த நிலையில் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலோரங்களில் இருந்த மர படகுகள் கரை ஒதுங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் சற்று அச்சம் அடைந்துள்ளனர். பொதுவாக இந்த கோடை காலங்களில் கடல் உள்வாங்குவது என்பது இயல்பான ஒன்று என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here