தமிழகத்தில் கடந்த சில காலமாகவே கோடை காலத்திலும் மழை பொழிந்து வருகிறது. ஆரம்பத்தில் கடுமையான வெயில் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் இதற்கு இதமளிக்கும் விதமாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ரிசல்ட் தேதி வெளியீடு.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
அதாவது சில காலமாகவே கீழடுக்கு சுழற்சி காரணமாக கோடை வெப்பம் சுட்டெரிக்காமல் மழை பெய்து வரும் நிலையில் இது மேலும் 5 நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மற்ற இடங்களில் மிதமானது முதல் அதிகப்படியான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அதிகப்படியான மழையால் நீர்நிலைகளில் நீர் நிரம்பியதால் குற்றாலம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.