போக்குவரத்து துறையில் அரசு சமீப காலமாகவே பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மக்கள் அதிவேக பயணதிக்காக மெட்ரோ திட்டத்தையும் விரிவுபடுத்தி வருகிறது.. அதாவது மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டுள்ளது.
சென்னையிலும் மெட்ரோ ரயில் அதிகம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ அமைப்பதற்கான பணிகள் மும்முரமாக போய் கொண்டுள்ளது. இந்த பணி 2026 ஆம் ஆண்டுக்குள் முடிவடைந்து விடும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தீவிரமெடுக்கும் மெட்ரோ பணியால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் சென்னையில் சில வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆற்காடு சாலை யுனைடெட் இந்தியா காலனி 1வது பிரதான சாலை முகப்பில் இருந்து அம்பேத்கர் சாலை வரை செல்ல தடை.கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து நேரடியாக இலகுரக வண்டிகள், பஸ்கள் அம்பேத்கர் சாலைக்கு ஆற்காடு வழியாக செல்ல தடை.
இவர்களுக்கு மாற்று வழியாக ரங்கராஜபுரம், யுனைடெட் இந்திய காலனி வழியாக செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வட பழனியில் இருந்து ஆற்காடு வழியாக நேரடியாக கோடம்பாக்கம் மேம்பாலத்திற்கு செல்லும் வழியில் வழக்கம் போல வாகனங்களுக்கு அனுமதி.