தமிழகத்தை உலுக்கி உள்ள சம்பவம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகன் சிறையில் அடைக்கப்பட்டு அடுத்து அடுத்து உயிர் இழந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சாத்தான்குளம் விவகாரம்:
தூத்துகுடி மாவட்டத்தில் உள்ளது சாத்தான்குளம்.அந்த ஊரை சேர்ந்த ஜெயராஜ் (58), மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை ஊரடங்கு சமயத்தில் கடையை திறந்து வைத்ததாக குற்றம் சாட்டி போலீசார் கைது செய்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் சிறையிலேயே இறந்தனர்.
கொரோனா தாக்கம் நெருக்கடி – 4வது முறையாக திருமணத்தை தள்ளிவைத்த பிரதமர்..!
அவர்களை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதே இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுவதாக வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா தெரிவித்து இருந்தார். .
திரை பிரபலங்கள் கண்டனம்:
இந்த விவகாரத்தால் மொத்த தமிழகமும் போலீசார் மீது அதிருப்தியில் உள்ளனர். இதற்கு பல விதங்களில் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. திரை பிரபலங்களும் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
Terrified to hear the brutality inflicted upon Jeyaraj & Fenix.
Totally inhuman and couldn’t digest the torture they must’ve gone thru.Let’s raise our voices for this ruthless act India! Jeyaraj and Fenix are the George Floyd of India.#JusticeForJeyarajAndFenix— D.IMMAN (@immancomposer) June 26, 2020
What happened in Saththankulam is HORRIBLE!! Insult to Humanism… The accused officials needs to be Punished and Justice has to be given to those poor souls…. Some Humans are more dangerous than Viruses!!#JusticeForJeyarajAndFenix
— karthik subbaraj (@karthiksubbaraj) June 25, 2020
பிரபலன்களான நடிகர் ஜெயம் ரவி, சாந்தனு, கவுதம் கார்த்திக் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது போல் இயக்குனர் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசையமைப்பாளர் டி.இமான் ட்வீட் மூலம் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
இது நடக்குமா ? ?
Total Injustice …
ஜார்ஜ் ஃபிலாய்டுக்கு நடந்தது அநீதி என்றால் .. தூத்துக்குடியில் இன்னிக்கு நம்ம ஆளு ஒருத்தருக்கு இதே நடந்துருக்கு, @CMOTamilNadu We need Justice ????#Thoothukudidistrictpolice pic.twitter.com/4j1AOTfxrC— Shanthnu ? ஷாந்தனு Buddy (@imKBRshanthnu) June 25, 2020
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க்காமல், மிக கொடூரமாக நிகழ்த்தபட்டிருக்கும் சாத்தான் குளம் தந்தை, மகன் படுகொலைக்கு அவர்களின் உடல் நலக்குறைபாடு தான் காரணம் என்று அறிக்கை விடுத்து, படுகொலைக்கு காரணமான காவலர்களை காப்பதற்க்கு துணியும் தமிழக அரசே! நீங்கள் தான் மக்களின் அரசா??
— pa.ranjith (@beemji) June 25, 2020