FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் போதும் பார்வைகளுக்கு என தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து:
உலக கோப்பை கால்பந்து தொடரானது வரும் 20ம் தேதி முதல், கத்தாரில் மிகவும் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்குபெற உள்ள 32 அணிகள் 8 பிரிவின் கீழ் தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றுகள் போல் இந்த தொடர் முதலில் நடத்த பட உள்ளது. இந்த லீக் சுற்றுகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை தொடர்ந்து, காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் டிசம்பர் 9ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஒரே தொடரில், கால்பந்து நட்சத்திர வீரர்களான ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதனால், போட்டிகளைக் காண ரசிகர் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி இல்லை.,, வாபஸ் பெறப்பட்ட கைப்புத்தகம்!!
இதன் விளைவால் ரசிகர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை FIFA அறிவித்து வருகிறது. அதன்படி, தற்போது போட்டி நடைபெறும் மைதானங்களில், மது விற்பனை செய்ய கூடாது என்று FIFA அறிவித்துள்ளது.