கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு வீரர்கள் வரிசையாக பலதரப்பட்ட போட்டிகளில் விளையாட உள்ளதால் கால்பந்து போட்டியில் 5 மாற்று வீரர்களை பயன்படுத்துவதற்கு சர்வதேச கூட்டமைப்பு (பிபா) அனுமதி வழங்கி உள்ளது.
கால்பந்து போட்டிகள்:
உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டிகள், கிரிக்கெட், கால்பந்து உட்பட பல வகையான விளையாட்டுப் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் தற்போது குறைந்து உள்ளதால் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளை மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் பல்வேறு கால்பந்து போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளன. ஜெர்மனியின் புகழ்பெற்ற பண்டேஸ்லிகா தொடர் விரைவில் தொடங்க உள்ளது.
வீரர்கள் தொடர்ச்சியாக பல்வேறு போட்டிகளில் விளையாட உள்ளதால் அவர்களின் உடல் நலன் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே காயம் போன்ற உடல் உபாதைகளை தவிர்க்கும் வகையில் சர்வதேச கால்பந்து சங்கத்தின் மாற்று வீரர்கள் விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு போட்டியிலும் 5 மாற்று வீரர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த விதிகள் 2020 – 2021 வரை நடைபெறும் தொடர்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |