90ஸ் காலத்தில் அனைவர்க்கும் பேவோரைட்டாக இருந்த தொகுப்பாளர் ஆனந்த் கண்ணன் நேற்று இரவு உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஆனந்த் கண்ணன்
சன் மியூசிக்கில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தவர் தான் ஆனந்த் கண்ணன். அப்பொழுதே தனது பேச்சாற்றலால் பலரின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர். இவரது நிகழ்ச்சி ஆரம்பித்தாலே போதும் அனைவரும் டிவியை நகர மாட்டார்கள்.
ஸ்மார்ட் போன் இல்லாத காலகட்டத்தில் அனைவரின் பெரும் பொழுதுபோக்காக இருந்தவர். சன் மியூசிக்கை தொடர்ந்து சன் டிவியிலும் வாய்ப்பு கிடைத்து தொகுத்து வழங்க ஆரம்பித்தார். அதன் பிறகு சிந்துபாத் என்ற பிரபல சீரியலில் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.
பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு போகும் அகில்!!
இவரது வெற்றி பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க சினிமாவிற்கு வாய்ப்பு தேடி போனவர் சில காலம் சின்னத்திரையில் தலைகாட்டாமல் இருந்தார். ஆனால் அவருக்கு படவாய்ப்புகளும் கிடைக்காமல் போக சின்னத்திரையிலும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
ஆனாலும் மக்கள் மத்தியில் தற்போது வரை நிலைத்துவர்கள் லிஸ்ட்டில் இவரும் ஒரு முக்கிய நபர் என்றே சொல்லலாம். இந்நிலையில் அவர் நேற்று இரவு உயிரிழந்த விஷயம் பலரையும் கவலையில் ஆழ்த்தியது. புற்று நோயால் அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்