91வது பிறந்த நாளில் இந்த விருது பெற்றது ரொம்ப மகிழ்ச்சி – நடிகை சௌகார் ஜானகி பெருமிதம்!!

0

தமிழ் சினிமாவில் 80ஸ் நாயகியாக வலம் வந்த நடிகை சௌகார் ஜானகிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்தது பற்றி தனது மனமார்ந்த நன்றியை நடிகை பகிர்ந்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது:

கடந்த 1931ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நடிகை சௌகார் ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 19 வயதில் திரைத்துறைக்கு வந்த இவர், கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். நடிகர் சிவாஜி கணேசனுடன் புதிய பறவை படத்தில், “பார்த்த ஞாபகம் இல்லையோ” என்ற பாடலில் நடித்து இன்று வரை ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளார்.

இவர் தில்லுமுல்லு, இரு கோடுகள், எதிர்நீச்சல்  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய அவர், தனது 91வது பிறந்த நாளில் தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக இந்த விருதை நினைப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here