சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சகாயம்:
இவர் கடந்த 2011ம் ஆண்டு மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார் சகாயம். இவர் இங்கு வந்ததும் பல அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவர் தனது பணியில் மிக கண்ணியமாக திகழ்ந்ததால் மக்கள் அனைவராலும் இவர் போற்றப்பட்டார். இவர் சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவர் பணிபுரிந்த 27 ஆண்டுகளில் 25 முறை இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது ஓய்வு பெற்ற நிலையில் சகாயம் சென்னையில் நடந்த ‘ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம்’ என்ற பெயரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். மேலும் இவரை அரசியலுக்கு வருமாறு தொடர்ந்து இளைஞர்கள் வலியுறுத்தி வந்தனர். தற்போது இதனை உறுதி செய்யும் வகையில் அந்த கூட்டத்தில் பேசிய சகாயம் கூறியதாவது, நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் புதிய சமுதாயத்தை படைக்க வேண்டும்.
‘விஜய் பண்ண ஒரே தப்பு உன்கூட நடிச்சது தான்’ – வனிதாவை கழுவி ஊற்றும் தளபதி ரசிகர்கள்!!
மேலும் ஊழலை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும். ஊழலுக்கு எதிராக நம் அனைவரும் லட்சியத்தோடு போராட வேண்டும். மேலும் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று தற்போது நான் அரசியல் களத்திற்கு வருகிறேன், என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பினால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.