அய்யய்யோ.., இப்படி மாட்டிக்கிட்டீங்களே ஜனனி.., அருணை நேருக்கு நேர் சந்திக்கும் கதிர்.., குணசேகரனிடம் சிக்குவாரா??

0
அய்யய்யோ.., இப்படி மாட்டிக்கிட்டீங்களே ஜனனி.., அருணை நேருக்கு நேர் சந்திக்கும் கதிர்.., குணசேகரனிடம் சிக்குவாரா??
அய்யய்யோ.., இப்படி மாட்டிக்கிட்டீங்களே ஜனனி.., அருணை நேருக்கு நேர் சந்திக்கும் கதிர்.., குணசேகரனிடம் சிக்குவாரா??

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி, சக்தி, கதிர், ஆதிரை அனைவரும் கரிகாலன் அம்மா ஜான்சிராணி உடன் கோவிலுக்கு செல்கின்றனர். இன்னொரு பக்கம் குணசேகரன் கல்யாணத்துக்கு தேவையான அனைத்து வேலைகளையும் தீவிரமாக பார்த்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் ஜான்சி ராணி சொன்ன கோவிலுக்கு அருகில் தான் ஜனனி சக்தி இருவரும் அருணை மறைத்து வைத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அங்கு கதிரிடம் மாட்டி விடுவோமோ என பயப்படுகின்றனர். இதை தொடர்ந்து அடுத்து வரும் எபிசோடில் நந்தினிக்கும் ஜான்சி ராணிக்கும் கோவிலிலே வாக்குவாதம் நடக்கிறது. இதை சாக்காக வைத்துக் கொண்டு கதிரும் பிரச்சனை செய்ய சக்தி, ஜனனி அனைவரையும் சமாதானப்படுத்துகின்றன. பின் அங்கிருந்து கிளம்பி இவர்கள் காரில் செல்லும் போது நேராக அருணும், ஜனனியின் நண்பரும் வருகின்றனர்.

என் ஹீரோ கத்தி பேசணும்., இல்லாட்டி கத்தியால பேசணும்., ஆர்யாவுக்கு விருமன் பட இயக்குனர் போட்ட condition!!

இதை பார்த்து நந்தினி, சக்தி, ஜனனி மூவரும் கதிர் பார்த்து விட்டால் என்னாகும் என பதட்டப்படுகின்றனர். ஒரு வேலை அப்படி கதிர் பார்த்துவிட்டால் நிச்சயம் அந்த இடத்திலேயே அருணை உண்டில்லை என்று ஆக்கி விடுவார். அப்படி இல்லை என்றால் குணசேகரனுக்கு போன் பண்ணி நடந்த விஷயத்தை சொல்லி அவரை வர வைப்பார். இதை வைத்து பார்க்கும்போது ஆதிரை அருணின் திருமணத்தை நடத்துவதற்குள் ஜனனி இன்னும் என்னென்ன சிக்கலில் மாட்டப் போகிறார் என்று தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here