எதிர்நீச்சல் சீரியலில் சித்தார்த்தை யார் கடத்தி வைத்துள்ளனர் என்பது தெரியாமல் உமையாள் தவித்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் எங்கு மாப்பிள்ளையை காணவில்லை என குணசேகரன் வேறு டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகாண ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நிச்சயம் சித்தார்த் நம்மிடம் இருக்கும் வரை ஜனனிக்கு எதுவும் ஆகாது என கதிர் சக்திக்கு வாக்கு கொடுக்கிறார்.
இந்த பக்கம் கோவிலில் ஜான்சி, கரிகாலன் இருவரும் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்க அவர்களை குணசேகரன் அடித்து விரட்டுகிறார். இதை பார்த்து ஜான்சி அப்போ நீ ஏதோ பெரிய திட்டம் வச்சிருக்க என குணசேகரனின் திருட்டுத்தனத்தை கண்டுபிடிக்கிறார். அடுத்ததாக ஜனனியை கடத்தி வைத்துள்ள கும்பல் சித்தார்த்தை எங்கே என்று கேட்டு அவரை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். அந்த நேரத்தில் யாரோ துப்பாக்கியுடன் காரில் என்ட்ரி கொடுக்கிறார். இதை வைத்து பார்க்கும்போது ஒருவேளை ஜனனியை காப்பாற்ற ஜீவானந்தம் கூட வந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இந்த நாளில் மூடப்படும்.., வெளியான அறிவிப்பு!!!