எதிர்நீச்சல் சீரியல் இப்போது பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் ஆதிரையின் திருமணத்தை சாக்காக வைத்து குணசேகரன் பல சதி வேலைகளை செய்கிறார். இது மட்டுமல்லாமல் அப்பத்தாவின் சொத்தை எப்படியாவது கைப்பற்ற துடிக்கிறார். இப்படி இருக்கும் நேரத்தில் இந்த சீரியல் குறித்த அடுத்த ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த ப்ரோமோவில் குணசேகரன் விசாலாட்சியிடம் எப்படிமா எல்லாரும் பச்சோந்தியா இருக்காங்க என என்று சொல்கிறார். இதை கேட்ட ரேணுகா கோவப்பட்டு எல்லாரும் உங்கள மாதிரி தான் இருப்பாங்க என குணசேகரனை குத்திக்காட்டி பேசுகிறார். இதைத் தொடர்ந்து ஆதிரை, விசாலாட்சி அருண் வீட்டுக்கு செல்கின்றனர்.
ஜெனி கர்ப்பத்திற்கு வரும் பேராபத்து.., ராதிகா செய்த மாஸ் சம்பவம்.., அதிர்ச்சியில் பாக்கியா!!
அங்கு ஆதிரை எனக்கு ஒரு முடிவு தெரியணும் என சாறு பாலாவிடம் கேட்க குணசேகரனின் அம்மா அவரது காலில் விழுந்து என் மகன் பண்ண எல்லாமே தப்புதான் மன்னிச்சிடுங்க. என் பொண்ணு ஏத்துக்கோங்க என கதறுகிறார். அந்த நேரத்தில் குணசேகரன், கதிர் அங்கு வர விசாலாட்சி செய்த காரியத்தை பார்த்து ஆத்திரம் அடைகின்றனர். இதை வைத்து பார்க்கும் போது அடுத்து வரும் எபிசோடுகளில் குணசேகரன் விசாலாட்சியை என்ன செய்ய போகிறார் என்று தெரியவில்லை.