இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாதவர்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. அதிலும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேபோல் சமூக வலைத்தளங்கள் மூலம் குழந்தைகளுக்கு மன ஆரோக்கிய வியாதிகள் அதிகரித்து வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் நம் நாட்டை விட வெளிநாடுகளில் தான் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
தமிழக போக்குவரத்து ஊழியர்களே…, 15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!
இதனை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி பள்ளிக்கூடங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது. மாணவர்களின் கவனம் சிதறி மதிப்பெண் குறைவதால் இந்த உத்தரவை அறிவித்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை பார்த்து நெட்டிசன்கள் அடப்பாவிங்களா அப்போ இவ்வளவு நாளா பள்ளிக்கூடத்திலா செல்போன் பயன்படுத்துக்கிட்டு இருந்தீங்களா என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.