தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் நடைபெற்று வர, தமிழக போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் சில கோரிக்கைகளை முன் வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றனர்.
அதாவது, 15-வது ஊதிய ஒப்பந்தம், போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்குதல், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்குதல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தன. இந்நிலையில், இணை ஆணையர் முன்னிலையில் நாளை (பிப்ரவரி 21) மதியம் 3 மணிக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களை முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.