தமிழகத்தில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலை நேற்று (பிப்ரவரி 19) நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று (பிப்ரவரி 20) வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில், தமிழக விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவிப்பதோடு, நிதிகளும் ஒதுக்கீடு செய்து வருகிறார்.
அந்த வகையில், பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, சீவன் சம்பா என்ற பெயரில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய பாரம்பரிய ரக நெல் ஆயிரம் ஏக்கர் அளவுக்கு சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு விதை விநியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.