எதிர்நீச்சல் சீரியல் இப்போது நாளுக்கு நாள் பல அதிரடியான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு பக்கம் குணசேகரன் கதிர், ஞானத்திடம் சொத்தை தன் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என மிரட்டுகிறார். இன்னொரு பக்கம் ஜனனி நிச்சயம் குணசேகரன் தான் தர்ஷினியை கடத்தி வைத்துள்ளார் என்ற விஷயம் தெரிந்து தீவிரமாக தேடி வருகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது குணசேகரன் என் சொத்து இல்லாமல் உங்களால் வாழவே முடியாது என சவால் விடுகிறார். உடனே சக்தி உன் சொத்து இல்லாமல் எங்களால் வாழ முடியும் என்று திமிராக பதில் சொல்கிறார்.
அப்போது குணசேகரன் கதிரை பார்த்து உன்னால் முடியுமா என நக்கலாக கேட்க தாரா எங்களுக்கு உங்க பணம் ஒன்னும் தேவை இல்லை. எங்களால் நீங்கள் இல்லாமல் வாழ முடியும் என்று குணசேகரன் முகத்தில் கரியை பூசுகிறார். அடுத்ததாக தர்ஷன் நிச்சயம் தர்ஷினியை நான் தேடிக் கண்டுபிடிப்பேன். அது மட்டுமல்லாமல் எங்க அம்மாவையும் வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன். அதன் பிறகு நீ என்னோட அப்பாவே கிடையாது என்று சொல்ல குணசேகரன் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியே செல்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக விவசாயிகளே…, இனி இதை அரசே விநியோகிக்கும்…, பட்ஜெட் தாக்கலில் வெளியான மாஸ் அப்டேட்!!