தமிழகத்தில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டும், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் விசைத்தறி ஊழியர்கள் ஏற்கனவே ஜவுளி தொழில் நஷ்டம் தான் ஏற்படுகிறது. எனவே தொழிலாளர்களின் நலன் கருதி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் இன்று விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர்கள், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை சந்தித்து மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்க கூடாது, நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் கட்ட அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அமல்படுத்த வலியுறுத்தி உள்ளனர்.
டிஆர்பிக்காக கவர்ச்சி கூடத்தையே களமிறக்கிய பிக் பாஸ்.., அடடே, இந்த தடவ ஒரே குதூகலம் தான் போங்க!!
இந்த கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் கூறுகையில், விரைவில் நாங்கள் முன் வைத்த கோரிக்கைகளை செயல்படுத்த உள்ளதாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என்றார்.