இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்று ஆதிக்கம் செலுத்தி வருவதால் மக்கள் வேதனை அடைந்து வரும் நிலையில் தற்போது புதுவை அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதனால் மக்கள் மேலும் வேதனை அடைந்துள்ளனர்.
மின் கட்டணம்:
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு ஆதிக்கம் செலுத்தி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த ஆண்டை போல் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவலை குறைக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி பணிகள் விரைவு படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கையாக தற்போது சில பகுதிகளில் முழு நேர ஊரடங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
புதுவையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த்தொற்று ஆதிக்கத்தை செலுத்தி வருவதால் தற்போது அங்கு முழு ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் புதுவை அரசு மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்யும் வகையில் ஓர் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது புதுவை அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
சதத்தை நெருங்கும் பெட்ரோலின் விலை – புலம்பும் வாகன ஓட்டிகள்!!
அங்கு தற்போது யூனிட்டிற்கு 5-15 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 100-200 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு 5 காசுகள் உயர்த்தப்பட்டு தற்போது ரூ.2.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 200-300 யூனிட் வரை 15 காசுகள் உயர்த்தப்பட்டும் 300 யூனிட்டிற்கு மேல் சென்றால் யூனிட்டிற்கு ரூ.6.5 செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வர்த்தக பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் தற்போது 10-15 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது.