மது ஊழல் வழக்கில் சிக்கிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு சிறையில் பல வசதிகள் ஏற்படுத்தி தந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறையினர் அவரது ஆப்பிள் ஐபோனில் ஏதேனும் தகவல்கள் இருக்கும் என திறக்க முயற்சி செய்துள்ளனர்.
உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனை திறக்க முடியும் என்ற சூழல் உள்ளதால் ஆப்பிள் நிறுவனத்திடம் மொபைலை திறக்க உதவி கூறியுள்ளனர் ஆனால் ஆப்பிள் நிறுவனம் எங்களால் ஐபோனை திறக்க உதவ முடியாது என கைவிரித்து விட்டனர்.