தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இன்னும் சில வாரங்களில் அக்னி வெயில் வேறு துவங்க உள்ளது.
இப்படி இருக்கும் சூழலில் இப்போது வானிலை மையம் தமிழகத்தில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்தில் திருப்பத்தூர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.