உலக அளவில் தற்போது கல்வியின் தரம் என்பது அனுதினமும் மேம்பட்டு வருகிறது. அதாவது, ஒவ்வொரு அரசும் தங்களது மாநிலத்தின் கீழ் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதோடு, அவர்களின் தனித் திறமைகளையும் வெளிப்படுத்த ஊக்குவித்து வருகின்றனர். இதன் மூலம், ஒவ்வொரு வருடமும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்திலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த வகையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயின் தனியார் பள்ளிகளில் இதுவரை இல்லாத அளவிற்கு மாணவர் சேர்க்கையில் பெரும் சாதனை படைத்துள்ளது. அதாவது, அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) வெளியிட்ட அறிக்கையின் படி, கடந்த கல்வியாண்டை காட்டிலும் 39 ஆயிரம் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சுமார் 12% மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்களே உஷார்., இந்த தேதியில் வெளுத்து வாங்க இருக்கும் மழை., சூறாவளி காற்றுக்கு எச்சரிக்கை!!