டெல்லியில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்க தொடர்ந்து 8 நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வரும் 5 ஆம் தேதி திமுக கட்சி போராட்டம் நடத்த உள்ளது.
விவசாயிகள் போராட்டம்:
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து, அதனை சட்டங்களாக நிறைவேற்றியும் உள்ளது. இந்த நிலையில் இந்த சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா உட்பட 6 மாநிலத்தை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இன்றுடன் 8 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இன்று விவசாயிகளுடன் இன்று மத்திய அமைச்சர்கள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கவுள்ளனர். விவசாயிகளின் போராட்டம் வன்முறையாக மாறி விடக் கூடாது என்று போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே போல் அவர்களுக்கு ஆதரவாக டெல்லி மக்களும் போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை!!
தமிழகம் முழுவதும் வரும் 5 ஆம் தேதி (நாளை) விவசாயிகளுக்கு ஆதரவாக இந்த போராட்டம் நடைபெற உளளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளி வாயிலாக இன்று நடந்த கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் நிதி மாவட்ட நிர்வாகிகளுக்கு இதனை தெரியபடுத்தினார். காலை 10 மணி அளவில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.