அர்ச்சனாவுடன் முதல் இடத்திற்காக சண்டை போடும் சனம் – தரமான சம்பவங்களுடன் ‘பிக் பாஸ்’!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு நாட்களாக டாப் 6 இல் யார் வர வேண்டும் என்ற போட்டி ஹவுஸ்மேட்ஸ் இடையே நடந்து வருகிறது. தற்போது இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 4 இல் கடந்த இரண்டு வாரங்களில் கால் சென்டர் டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் பலரும் இத்தனை நாட்கள் தங்களுக்கு இருந்த கேள்வியினை கேட்டுக்கொண்டனர் என்றே சொல்லலாம். அதிலும் அனிதா ரியோவிடம் கேட்ட கேள்வி தான் அதிரடி. பதிலே சொல்ல முடியாத அளவிற்கு நெத்தியடி கேள்விகளை தொடுத்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுவரையிலும் நிஷா ரியோ தான் ஜெயிக்க வேண்டும் என்றும் கூறிவந்தார். இதற்கு கமலும் பதில் கொடுத்தார். அதாவது இந்த வாய்ப்புக்காக பலரும் காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் நீங்க கிடைச்ச வாய்ப்பை இப்டி பண்றிங்க என்று கண்டிக்கவும் செய்தார்.

மேலும் நிஷாவிற்கு தற்போது ஆதரவும் குறைந்து வருகிறது. ரியோ கொடுத்த காசுக்கு மீறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் யார் ஜெயிப்பார்கள் என்று நினைத்திருந்தோமோ அவர்கள் எல்லாம் இப்பொழுது வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  தற்போது விஜய் டிவி இன்றைக்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. முதல் ப்ரோமோவில் பாலா தனது இடத்திற்காக பேசி வருகிறார். அதாவது ஆரியிடம் தான் அவ்வளவு நேரம் தாக்குப்பிடித்து பேசி வந்தேன். என்று கூற ஜித்தன் ரமேஷ் அதற்கு பொங்கி எழுகிறார். இப்படி பேசியே டாப் 6 க்கு வரலாம்னு நினைப்பா என்று கேட்டு விடுகிறார்.

அருக்காணி வேடத்தில் அஸ்வினிடம் ஜொள்ளுவிடும் ஷிவாங்கி!!

இதற்கு பாலாவிடம் எந்த பதிலும் இல்லை. அடுத்த ப்ரோமோவில் முதல் இடத்திற்காக அர்ச்சனா சனம் சண்டையிடுகின்றனர். கடைசியில் சனம் முதல் இடத்தை பிடிக்கிறார். மேலும் எனக்கு கால் பண்றதுக்கு உங்களுக்கு எல்லாம் பயம் அதான் இப்படி பண்றீங்க என்று சொல்ல ரமேஷ் ‘ஐயோ எனக்கு பயமா இருக்கு’ என்று சனம் ஷெட்டியை கிண்டலடிக்கிறார். இதோடு ப்ரோமோவும் முடிகிறது. இதன் மூலம் இன்றைய எபிசோடில் பல சம்பவங்கள் காத்துக்கொண்டுள்ளது மட்டும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here