தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், முக்கிய கடைவீதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க, அரசு போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
போக்குவரத்துக்கு தடை :
பெரும்பாலான மக்களால் அதிகம் கொண்டாடப்படும், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. பண்டிகை நெருங்கி வருவதால், பொதுமக்கள் பலரும் பொருட்களை வாங்க முக்கிய வீதிகளில் குவிந்து வருகின்றனர். துணிக்கடை, முக்கிய சாலை மற்றும் பட்டாசு கடை ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து, மாநிலம் முழுவதும் பொது மக்களை கண்காணித்து, கூட்ட நெரிசலை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் புதுச்சேரி, மாநில அரசு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. (அக்.21)அதாவது நாளை முதல், வருகிற அக்.24ம் தேதியான தீபாவளி வரை முக்கிய சாலைகளில் மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு சூப்பர் வசதி – இனி உங்க கோரிக்கை எல்லாம் நிமிஷத்துல பரிசீலனை! ஸ்டாலின் அதிரடி!!
மாநிலத்தில் உள்ள நேரு வீதி, காமராஜர் சாலை, அண்ணா சாலை ஆகிய முக்கிய வீதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து, போக்குவரத்தில், பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.