நடிகர் சிம்பு தனது 50வது படத்தை முடித்தவுடன் மீண்டும் இயக்குனராக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு:
தமிழ் சினிமாவில் கிசு கிசு மன்னனாக வலம் வந்தவர் தான் நடிகர் சிலம்பரசன் TR. தற்போது இவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ணா படைப்பில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. இப்படம் டிசம்பர் மாதம் திரை காண இருக்கிறது.
மேலும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். நடிகர் சிம்புவின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்த படங்கள் மன்மதன் மற்றும் வல்லவன் என்றால் அது மிகையாகாது.மேலும் நடிகர் சிம்பு மன்மதன் படத்திற்கு கதை-திரைக்கதையும், வல்லவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதற்கடுத்து அவர் எந்த படங்களும் இயக்கவில்லை. இந்நிலையில் சிலம்பரசனிடம் படம் இயக்குவதை குறித்து ரசிகர்கள் கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர், நான் கிட்டத்தட்ட பத்து கதைகள் எழுதி வைத்திருக்கிறேன், என்னுடைய 50வது படம் முடிந்தவுடன் இயக்குனராக களமிறங்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்து உள்ளனர்.