இயக்குனர் ஹரி படைப்பில் அடுத்து உருவாக இருக்கும் படம் குறித்து முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புது படம்:
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத இயக்குனராக கொடி கட்டி பறப்பவர் தான் இயக்குனர் ஹரி. இவர் படைப்பில் கடைசியாக வெளிவந்த யானை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இயக்குனர் ஹரி கேரியரில் அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்ற திரைப்படம் என்றால் அது சிங்கம் தான்.
நடிகர் சூர்யாவின் தத்துரூபமான நடிப்பால் இப்படம் மிகப்பெரிய வெற்றியை தொட்டது.இதை தொடர்ந்து சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 படத்தை இயக்கினார். ஆனால் சிங்கம் 3 படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது நடிகர் சூர்யா-வை வைத்து மீண்டும் சிங்கம் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்ததால், சிங்கம் 4 படத்தின் கதையை மும்முரமாக இவர் எழுதி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.