அச்சச்சோ.,வணங்கான் பட நடிகையின் கன்னம் பழுத்தது… ஷூட்டிங்கில் இருந்து பதறியடித்து ஓடிய சம்பவம் – போலீஸில் புகார்!!

0
அச்சச்சோ.,வணங்கான் பட நடிகையின் கன்னம் பழுத்தது... ஷூட்டிங்கில் இருந்து பதறியடித்து ஓடிய சம்பவம் - போலீஸில் புகார்!!
அச்சச்சோ.,வணங்கான் பட நடிகையின் கன்னம் பழுத்தது... ஷூட்டிங்கில் இருந்து பதறியடித்து ஓடிய சம்பவம் - போலீஸில் புகார்!!

இயக்குனர் பாலா படைப்பில் உருவாகி வரும் வணங்கான் படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க வந்த நடிகை ஒருவரை கன்னத்தில் அடித்த சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பாலா:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக விளங்கி கொண்டிருப்பவர் தான் பாலா. கடந்த சில வருடங்களாக எந்த பட வாய்ப்பு கிடைக்காமல் அல்லோல பட்டு வந்த பாலாவுக்கு நடிகர் சூர்யா வாய்ப்பு கொடுத்தார். அதன் படி சூர்யாவை வைத்து வணங்கான் என்ற படத்தை எடுக்க தொடங்கினர். கொஞ்சம் நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில் சூர்யாவை அதிகமாக சித்திரவதை செய்ததால் பாலாவிடம் இருந்து எஸ்கேப் ஆனார் சூர்யா.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின் சூர்யா நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில், அருண் விஜய்யை வைத்து அப்படத்தை எடுத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த படப்பிடிப்பில் புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது வணங்கான் படத்தில் நடிக்க கேரளாவில் இருந்து துணை நடிகைகளை ஜிதின் என்பவர் அழைத்து வந்துள்ளார். இதில் லிண்டா என்ற பெண்ணும் ஒருவர்.

செதுக்கி வச்ச சிலையாட்டம் இருக்கு இடுப்பை காட்டிய ரேஷ்மா.., ஒரே போஸால் மலைத்துப்போன இளசுகள்!!!

அவர்களுக்கு 3 நாள் நடிப்பதற்கு மொத்தமாக ரூ. 22 ஆயிரத்து 600 சம்பளம் என பேசி அழைத்து வந்திருக்கிறார் ஜிதின். ஆனால் அவரோ பேசியபடி சம்பளத்தை கொடுக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஜிதினிடம் கேட்க சென்றுள்ளார் துணை நடிகை லிண்டா. பேசிய காசை தர மறுத்த ஜிதின் லிண்டாவை அடித்து உதைத்து கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நடிகை லிண்டா கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் வணங்கான் படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here