மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் லோவ்லினா மற்றும் சாக்ஷி சவுத்ரி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
டெல்லியில் மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. உலக நாடுகளில் இருந்து, பல வீராங்கனைகள் பங்குபெற்றுள்ள இந்த தொடரில், இந்தியா சார்பாக சாக்ஷி சவுத்ரி, லோவ்லினா உள்ளிட்டவர்கள் வெவ்வேறு எடை பிரிவுகளின் கீழ் கலந்து கொண்டுள்ளனர். இதில், டோக்கியோ ஒலிம்பிக் நாயகியான லோவ்லினா 75 கிலோ எடைப்பிரிவில் பங்கு பெற்றார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
நேற்று இவர் சுற்று 16ல், மெக்சிகோவின் சிட்டாலி ஒர்டிஸை எதிர்த்துப் போட்டியிட்டார். இந்த போட்டியில், சிறப்பாக செயல்பட்ட லோவ்லினா தொடர்ந்து புள்ளிகளை கைப்பற்றி 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், லோவ்லினா காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
இதே போல, 52 கிலோ எடை பிரிவில், இந்தியாவின் சாக்ஷி சவுத்ரி, கஜகஸ்தானின் உரக்பயேவா ஜாசிராவை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 54 எடை பிரிவுக்கான போட்டியில், இந்தியாவின் ப்ரீத்தி தாய்லாந்து வீராங்கனைக்கு எதிராக கடுமையாக போராடி 2-3 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்ந்தார்.