இன்றைய காலகட்டத்தில் கடைகளில் பொருள் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் ஒருவருக்கு தரவேண்டிய பணத்தை G Pay, Paytm போன்ற UPI செயலிகள் மூலம் சில நிமிடங்களிலே மாற்றப்பட்டு வருகிறது. இருந்தாலும் லட்சக்கணக்கான ரூபாயை ஒருவருக்கு அனுப்ப, அவர்களின் வங்கி எண், IFSC நம்பர் உள்ளிட்டவைகளை டைப் செய்து IMPS மூலம் மாற்ற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்த சூழலில் புதிய டிஜிட்டல் அம்சத்தை இந்திய தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன் (NPCI) விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.அதன்படி வங்கி கணக்கு எண் மற்றும் மொபைல் எண் இல்லாமல் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.5 லட்சம் வரை பணம் அனுப்பும் வசதி அமலுக்கு வரும் என தகவல் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வசதி பெரும்பாலானோர்க்கு உதவக்கூடிய வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.