ஒரு சில சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் தோட்டத்தின் நடுவே பூக்கள் மத்தியில் அமர்ந்த படி உள்ளார்.
முள்ளும் மலரும் என்ற சீரியல் மூலம் மக்களுக்கு ஒரு சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் தர்ஷா குப்தா. அதன் பின்னர் சன் டிவியில் மின்னலே, விஜய் டிவியின் செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் குக் வித் கோமாளி சீசன் 2 என்ற சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உள்ளார். சீரியல்கள் மூலம் கிடைக்காத பெயரும் புகழும் இவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்தது.
மேலும் அவரின் நீண்ட நாள் கனவும் இதன் வாயிலாக நிறைவேறியது. அதாவது இவர் தற்போது ருத்ர தாண்டவம் என்ற பெயர் கொண்ட புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தை திரௌபதி பட இயக்குனர் மோகன் இயக்கி வருவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.
மேலும் பல பட வாய்ப்புகளை பெற சமூக வலைத்தளங்கள் மூலம் பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் லோ நெக் உடையில் கிளாமராக தோட்டத்தின் நடுவே பூக்களோடு பூக்களாக நின்று கொண்டிருக்கிறார். மேலும் இந்த புகைப்படங்களோடு சேர்த்து எண்ணங்கள் அழகானால்..வாழ்க்கையும் அழகாகும்.. என்ற கேப்சனையும் வைத்து உள்ளார்.