நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 33,376 பேர் புதிதாக கொரோனா தொற்றின் பிடியில் சிக்கியுள்ளனர். மேலும் இறப்பு எண்ணிக்கை 308 ஆக பதிவாகியுள்ளது. சற்று நிம்மதி அளிக்கும் இந்தியாவில் ஒரே நாளில் 32198 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இந்தியாவில் மக்களுக்கு கவலை அளிக்கும் விதமாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலையின் தொடக்கமாக இருக்குமோ என்றும் மக்கள் மனதில் ஒரு அச்சம் எழுந்துள்ளது. ஏனென்றால் ஏற்கனவே நிபுணர்கள் செப்டம்பர் இறுதியில் கொரோனா மூன்றாம் அலையின் பாதிப்புகள் உச்சம் தொடும் என்று கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா நிலவரம் குறித்து உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மூன்றாம் அலையை தடுப்பது, தடுப்பூசி விநியோகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாநில அரசுகளும் தங்கள் மக்களை பாதுகாக்க மருத்துவ உள்கட்டமைப்புகளை அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்திய மத்திய அரசின் தகவலின் படி, நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 33,376 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மேலும் 308 பேர் பலியாகியுள்ளனர். 32198 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,23,74,497 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்ட 3,91,516 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்