தமிழகத்தில் ஆடி மாதங்களில் வரும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் கோயில் தளங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அடர்ந்த வனம் சூழ்ந்த மலையேற்ற பாதையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு, பக்தர்கள் செல்ல ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு அனுமதி உண்டு என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நாட்களில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இயக்குனர் பாலா மனைவியுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதி மகன்.., உண்மையை உடைத்த பிரபலம்!!!