கொரோனா நோயை தொடர்ந்து பரவி வரும் டெங்கு. இந்தியாவிலேயே தமிழக்தில்தான் பாதிப்பு அதிகம் என்று ஆய்வில் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் 2008 பேருக்கு டெங்கு…
கடந்த 2019 ஆம் ஆண்டு கடைசியில் இருந்து உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கம் இன்னும் குறைந்தபாடு இல்லை. முதல அலை இரண்டாம் அலை என்று வந்த இந்நிலையில் இப்பொழுது 3வது அலை தொடங்க உள்ளதாம். ஆனால் இந்த கொரோனா தாக்கத்தால் பல உயிர்களை இழந்தோம். இதற்கிடையில் இப்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகிறதாம், இந்தியாவில் பருவமழை தொடக்கிருப்பதால் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் சிக்கன் குனியா, டெங்கு போன்ற நோய்க்கள் பரவி வரும். இந்த நோய்க்காலின் தாக்கமும் அதிகம் இருக்கும், பெருத்தொற்றுகளின் பாதிப்பு மிக பெரியளவில் இருக்கிறது.
டெங்கு காய்ச்சல் DENV என்ற வைரஸால் உருவாகிறது. டெங்கு கொரோனா போன்ற இரு நோய்களுக்கும் ஒரு அறிகுறிகளை இருப்பதால மருத்துவர்கள் சற்று நோயை கண்டறிய சிரமப்படுகின்றனர். இந்த டெங்கு ஏடிஸ், ஏஜிப்டி வகை கொசுக்களால் பரவும். இந்த நோய் லத்தீன் அமெரிக்கா, ஆசிய நாடுகளில் அதிகம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் ஆகும். டெங்கு 10 கோடி மக்கள் முதல் 40 கோடி மக்களை ஆண்டுதோறும் பதித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. பருவ மழைக்காலத்தில் டெங்கு போன்ற தொற்று அதிகரிக்கும் என்பதால் மருத்துவத்துறை மற்றும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் நோய்களை பரவாமல் தடுக்க அதற்கான பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும், இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழ்பநாட்டில் மட்டும்தான் கடந்த 5 மாதங்களில் 2008 பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்ததாக அறிக்கை வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்