அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு திருநங்கைகளை, கொடூரமாக தாக்கி ஒருவரை கொலை செய்த, குற்றவாளியை மாநில போலீஸ் அதிரடியாக கைது செய்துள்ளது.
போலீஸ் கைது:
டெல்லியில் உள்ள முக்கியமான பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சுனிதா மற்றும் குட்டு என்ற இரண்டு திருநங்கைகள் கொடூரமான முறையில் தாக்கப்படுவதாக, அந்த நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை எடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சட்டப்பேரவை துணை சபாநாயகர் மாரடைப்பால் மரணம் – முதல்வர் இரங்கல்! தொண்டர்கள் அதிர்ச்சி!!
இதில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த குட்டு என்ற திருநங்கை உயிரிழந்தார். இந்த வழக்கில் அனில் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருநங்கைகளை தாக்கியதற்கான காரணம் குறித்து சுனில் தெரிவித்ததாவது, கடந்த 2020ல் சுனிதாவும் தானும் பழகி வந்ததாகவும், ஆனால் அவர் தன்னிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு, தன்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது அவர் குட்டுவுடன் சேர்ந்து வசித்து வந்தது தனக்கு தெரிந்ததால் அவரிடம் சென்று தன் 40, 000 ரூபாயை திரும்பி கேட்டு அவர்களை, தாக்கியதாக தெரிவித்தார். இந்த நிலையில், சம்பவ இடத்தில் ரத்தக்கரையுடன் கிடந்த ஆடை மற்றும் கத்தியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில், திருநங்கையை கொன்ற அனில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.