பிப்.1ல் தூக்கு – நிர்பயா வழக்கில் புதிய தீர்ப்பு

0

டில்லியில் நிர்பயா என்ற பெண் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் மரண தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களின் தூக்கு தண்டனை பிப்ரவரி 1 அன்று காலை 6 மணிக்கு நிறைவேற்றப்படும் என புதிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை:

டெல்லியில் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2013-ம் ஆண்டு சிறையில், ராம்சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதை எட்டாத ஒருவர் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலம் முடிந்த பிறகு, அவர் விடுவிக்கப்பட்டு விட்டார்.

எஞ்சியுள்ள நான்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மரண தண்டனைக்கு உள்ளான குற்றவாளிகள் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தனர். அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தள்ளுபடி செய்துவிட்டார்.

பிப்ரவரி 1 ல் தூக்கு:

கருணை மனுக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களின் தூக்கு தண்டனை ஆனது ஜனவரி 22 ல் இருந்து பிப்ரவரி 1 க்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் பிப்ரவரி 1 காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here