கொரோனா இருப்பதாக நினைத்து பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பலி – உ.பி.யில் கொடூரம்!!

0

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா இருப்பதாக கூறி பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் கொடூர கொலை..!

கடந்த ஜூன் 15ம் தேதியன்று அன்ஷிகா யாதவ் வயது 19 என்ற இளம்பெண் தனது தாயுடன் டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்திற்கு பயன் செய்துகொண்டிருந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் அந்த பெண்ணிடம் இருப்பதாக சக பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி ஓட்டுநரும், நடத்துநரும் சேர்ந்து அப்பெண்ணை வெளியே தூக்கி வீசினர் படுகாயமடைந்த பெண் அடுத்த 30 நிமிடங்களில் சாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் உடனே உத்தரப்பிரதேச மாநில போலீசில் புகார் அளித்ததை அடுத்து கொடூர செயலை செய்த குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து நேற்று விசாரணைக்கு உத்தரவிட்டதன் மூலம் விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மதுரா போலீசில் புகார் கொடுத்தார் ஆனால் அது இயற்கையான மரணம் என்று கூறி அவர்கள் புகார் எடுக்க மறுத்துவிட்டனர்.

கல்லூரி மாணவியை ஆபாசமாக பேசிய விவகாரம் – உதவி பொறியாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

இதுதொடர்பாக மதுரா எஸ்.எஸ்.பி கவுரவ் குரோவர் பிரேத பரிசோதனையில் இறப்பிற்கான காரணம் மாரடைப்பு என்று தெரியவந்துள்ளது இருப்பினும் எஸ்.பி ஷிரிஷ் சந்திராவிடம் வழக்கு குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here