கல்லூரி மாணவியை ஆபாசமாக பேசிய விவகாரம் – உதவி பொறியாளர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

0

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக செல்போனில் பேசிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் மீது வழக்குப்பதிவு.

கல்லூரி மாணவி புகார்..!

சென்னை எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி புகார் அளித்திருந்தார். அதில் மண்ணடியில் உள்ள மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக தன்னார்வலர் என்ற அடிப்படையில் பணியில் இருந்தபோது மாநகராட்சி உதவி பொறியாளர் செல்போனில் தன்னிடம் ஆபாசமாக பேசியதாகவும் புகார் அளித்திருந்தார்.

அது தொடர்பான ஆடியோவையும் போலீசாரிடம் சமர்பித்திருந்தார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உதவி பொறியாளர் கமலக்கண்ணனை பணியிடை நீக்கம்செய்ய உத்தரவிட்டார்.

அதிமுக.,வில் சசிகலாவிற்கு இடமில்லை – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!!

2 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

இந்த நிலையில் ஆடியோவை ஆதாரமாக வைத்து விசாரணை செய்த எஸ்பிளனேடு அனைத்து மகளிர் போலீசார் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அயனாவரத்தில் வசித்து வரும் கமலக்கண்ணனை கைது செய்ய போலீசார் சென்றபோது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து தலைமறைவாக உள்ள உதவி பொறியாளரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here