சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அவருக்கு அதிமுக.,வில் இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
அதிமுக – சசிகலா:
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் தண்டனை சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாராவில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் தண்டனை காலம் முடிவதற்கு முன் ஆகஸ்ட் 15ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் வெளிவந்தது. ஒரு வேளை முன்கூட்டியே சசிகலா விடுதலை செய்யப்பட்டால் அதிமுக தலைமையை யார் நிர்வகிப்பர்? என கேள்விகள் எழுந்தது.
அமைச்சர் செல்லூர் ராஜுவிற்கு கொரோனா தொற்று உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!
இந்நிலையில் இது குறித்த கேள்விக்கு இன்று பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சிறையில் இருந்து வெளியே வந்தாலும் சசிகலாவிற்கு அதிமுக.,வில் இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். ஒரு குடுமபத்தைச் சேர்ந்தவர்களை தவிர பிற அனைவர்க்கும் அதிமுக.,வில் இடம் உள்ளது என அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இதில் முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு தான், எப்பொழுதும் அந்த ஒரே முடிவு தான் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.