இந்தியாவின் 75வது குடியரசு தின விழா வருகிற 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று (ஜன.19) முதல் வரும் 26-ம் தேதி வரை விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதன்படி,
இன்று (ஜன. 19) முதல் ஜனவரி 25ஆம் தேதி வரையிலும், காலை 10.20 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை விமானம் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஜனவரி 26ஆம் தேதி காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை எந்தவித விமான சேவையும் இருக்காது எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
விமான பயணிகளுக்கு ஷாக்., இந்த தேதி வரையிலும் சேவைகள் நிறுத்தம்? மத்திய அரசு அதிரடி!!!