‘சர்ச்சையை சரி செய்ய தான் பொய் சொல்றாங்க’ – இந்திய வீராங்கனை மீது இங்கிலாந்து கேப்டன் குற்றசாட்டு!!

0
'சர்ச்சையை சரி செய்ய தான் பொய் சொல்றாங்க' - இந்திய வீராங்கனை மீது இங்கிலாந்து கேப்டன் குற்றசாட்டு!!
'சர்ச்சையை சரி செய்ய தான் பொய் சொல்றாங்க' - இந்திய வீராங்கனை மீது இங்கிலாந்து கேப்டன் குற்றசாட்டு!!

மன்கட் அவுட் சர்ச்சை விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா பொய் கூறுகிறார் என, இங்கிலாந்து கேப்டன் தெரிவித்துள்ளார்.

தீப்தி சர்மா

இங்கிலாந்து எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணி, ஒயிட் வாஷ் செய்து 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஆனால் இந்த வெற்றிக்கு தீப்தி சர்மா செய்த விஷயம் யாராலும் மறக்க முடியாததாக மாறியுள்ளது. அதாவது ஒரு நாள் தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 39 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய அணி ஒரு விக்கெட் வீழ்த்தினால் வெற்றி கிடைக்கும் என்ற நிலையில் இருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்போது பவுலிங் செய்த தீப்தி பந்து வீசுவதற்கு முன்பாகவே ‘நான் ஸ்டிரைக்கரில்’ நின்றிருந்த டியான் எல்லைக்கோட்டை விட்டு நகர்ந்தார். இதனால் தீப்தி, டியானை மன்கட் முறையில் ஆட்டமிழக்கச் வைத்தார். இதற்கு தீப்தி மீது பல சர்ச்சைகள் கிளம்பியது. அதாவது தீப்தி சர்மா ஏமாற்றி விக்கெட் எடுத்துள்ளார் என அனைவரும் கூறினர். அதற்கு பதிலளித்த தீப்தி அவரை நான் ICC விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் அவுட் செய்தேன்.

எதிரணியை இப்படி பண்ணிட்டீங்களே கோலி.., போன வருட சம்பவத்தை சுட்டிக்காட்டிய பாக்.., முன்னாள் கேப்டன்!!

மேலும் இங்கிலாந்து வீராங்கனைகள் இது போன்ற செயலை பல முறை செய்தனர். அதை நாங்கள் எச்சரித்த போதும் மீண்டும் மீண்டும் இதே தவறை செய்தார்கள். இதனால் தான் நான் ஆட்டமிழக்க செய்தேன் என தீப்தி சர்மா கூறியுள்ளார். இதற்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் சார்லி, நாங்கள் இதுபோன்ற தவறை செய்தோம் என யாரும் எங்களிடம் கூறவில்லை. இந்த சர்ச்சைகள் அனைத்தையும் சமாளிப்பதற்காக தான் தீப்தி சர்மா பொய் சொல்கிறார் என சார்லி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here